என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.டி.பி.ஐ."
- பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கோவை உக்கடத்தில் நடந்தது.
- பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.
கோவை,
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கோவை உக்கடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பாசிச எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், அந்த இடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ராமர் கோவில் கட்டப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக மத்திய அரசை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாட்டிலுள்ள மதசார்பற்ற அரசுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த இடத்தை மீட்டு தர குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.
- ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாடு நடந்தது.
- மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை திடல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பாராளுமன்ற தொகுதி மாநாடு நடந்தது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும்,தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், அழிந்துவரும் விவசாயத் தொழிலை மீட்டெடுக்கவும், பனைத்தொழிலை பாதுகாக்கவும், தொழில்வளத்தை அதிகப்படுத்தக் கோரியும் இந்த மாநாடு நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்ஜமீல் வரவேற்றார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.
- எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் ராமநாதபுரம் நகர் சார்பாக 9 இடங்களிலும், கீழக்கரை நகரில் 7 இடங்களிலும், பெரிய பட்டினம் நகரில் 3 இடங்களிலும், திருப்புல்லாணி நகரில் ஒரு இடத்திலும் மொத்தம் 20 இடங்களில் கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கீழக்கரை நகரில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, ராமநாதபுரம் நகரில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜமிளுன் நிஷா, பெரிய பட்டணம் நகரில் மாவட்ட தலைவர் ரியாஸ்கான், பெரியபட்டினம் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் பெரோஸ் கான், பொறியாளர் அணி ஷேக் ஜலால் ஆகியோர் கொடி யேற்றினர்.
மாவட்ட அலுவலகத்தில் மாவட்டபொது செயலாளர் அப்து்ல் ஜமீல், திருப்புல் லாணி நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ் குமார், ராமநாதபுரம் நகரில் மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்டத் துணைத் தலைவர் தொகுதி துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொண்டரணி மாவட்ட தலைவர் ஜகுபர் சாதிக் கொடியேற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கீழக்கரை நகரில் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டது. பின்பு தெருமுனை கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் பேசினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
- மாநில நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அத்துமீறி சோதனை நடத்தியதாக கண்டித்து இநத ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட பொதுச் செயலாளர் கலீல் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அத்துமீறி சோதனை நடத்தியதாக கண்டித்து இநத ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட துணை தலைவர் பக்ருத்தீன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் கபீர் வரவேற்றார்.
மாவட்ட பொதுச் செயலாளர் கலீல் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் துரைகுட்டி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஆதம்பாஷா ஆகியோர் பேசினார்கள்.இதில் மாவட்ட பொருளாளர் ஜாவித்பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சதாம் உசேன், ஜெயக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஷர்புதீன், மாவட்ட செயலாளர் முன்னா, மாவட்ட பொருளாளர் உசேன், மாவட்ட துணை தலைவர் கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி ஊடக அணி பொறுப்பாளர் சதாம்உசேன் நன்றி கூறினார்.
- மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தத.
- செயல்வீரர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
மதுரை
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை யை கண்டித்து கண்டன கோஷம் கரிசல் பட்டியில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகம் சோழவந்தான் தொகுதி சார்பில் அலங்கா நல்லூர் ஒன்றியம், பேரூ ராட்சியில் நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ரகுமான் தலைமை யில் கண்டன கோஷம் நடைபெற்றது. இதில் கட்சியின் அலங்காநல்லூர் பேரூராட்சி கிளை தலைவர் மைதீன், கிளைச் செயலாளர் அஜ்மீர் காஜா, மாலைப்பட்டி ஊராட்சி கிளை தலைவர் சையது மற்றும் பெரிய ஊர்சேரி ஊராட்சிகிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.






