search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ ரேஸ்"

    பூந்தமல்லியில் பொது மக்களை மிரட்டும் வகையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அருகே தாம்பரம் - மீஞ்சூர் வெளிவெட்ட சாலையில் ‘பைக்’ ரேஸ், ஆட்டோ ரேஸ் நடப்பதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்று அதிகாலை பைக் ரேஸ் தடுப்பு போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றனர்.

    இதையடுத்து மலையம்பாக்கம் அருகே ரேசில் ஈடுபட்ட 6 ஆட்டோக்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அதிலிருந்த திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ், மாங்காடு மணிகண்டன், பாடியை சேர்ந்த கணேஷ், சங்கர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 20-க்கும் மேற்பட்ட தப்பி ஓடிவிட்டனர்.

    கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது லட்சக்கணக்கில் செலவு செய்து ஆட்டோவின் என்ஜினை மாற்றியமைத்து ஆட்டோ ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பந்தயத்தில் 2 ஆட்டோக்கள் மட்டும் போட்டி போட்டு உள்ளது. அதனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பணம் கட்டியவர்கள் வந்துள்ளனர். இதற்கு பந்தயமாக லட்சக் கணக்கில் பணம் கட்டி இருக்கிறார்கள்.

    அதிகாலை நேரத்தில் நடத்தப்படும் இந்த ஆட்டோ - பைக் ரேசால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ரேசில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×