search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்சீஸ்வரர் கோவில்"

    • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர்களால் பாடல்பெற்ற தலம் ஆகும்.
    • இந்த தலத்தில் காமீகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    1. அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மிக மிக பழமையான ஆலயம் ஆகும்.

    2. இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு வந்த மற்ற அரசர்கள் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர்.

    3. தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய 3 சிறப்புகளையும் கொண்டது இந்த ஆலயம்.

    4. தொண்டை நாட்டில் மொத்தம் 32 சிவன் முக்தி தலங்கள் இருக்கின்றன. அதில் 29வது தலமாக அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது.

    5. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர்களால் பாடல்பெற்ற தலம் ஆகும்.

    6. கண்ணுவமுனிவர், கவுதம முனிவர், அகத்தியர், உமாபதி சிவாச்சாரியார், அருணகிரிநாதர், வள்ளலார் போன்றவர்கள் இத்தலத்தில் வழிபட்டு பலன் பெற்றவர்கள்.

    7. திருமணத்தடை, அரசியல் வெற்றி, அரசு பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் பெற ஆட்சீஸ்வரரை வழிபட்டால் நிச்சயம் நன்மை உண்டாகும்.

    8. தினமும் இத்தலத்தில் நான்கு கால பூஜை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு காலசாந்தி, 11.30 மணிக்கு உச்சிகாலம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சம், இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடத்தப்படுகின்றன.

    9. ஆண்டு தோறும் குரு பெயர்ச்சி, இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு சனிபெயர்ச்சி போன்றவையும் இந்த தலத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    10. மாதந்தோறும் இத்தலத்தில் பிரதோஷ வழிபாடும் சிறப்பு பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்றைய தினம் நந்தியை வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.

    11. அமாவாசை, பவுர்ணமி, சங்கட சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    12. சித்திரை மாதம் இந்த தலத்தில் பிரமோற்சவ விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வை பின்னணியாக கொண்டு பிரமோற்சவம் நடக்கிறது. 11வது நாள் பெரும்பேறு கண்டிகை என்ற கிராமத்துக்கு சிவப்பெருமான் எழுந்தருளி அகத்தியருக்கு காட்சி கொடுப்பார். அதன் பிறகு கிரிவலம் நடைபெறுகிறது.

    13. இந்த தலத்தில் காமீகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    14. பல தடவை தொல்லியல் வல்லுனர்கள் இந்த தலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். அப்போது ஒரு தடவை 6ம் நூற்றாண்டுக்குரிய பாத்திரங்கள் கிடைத்தன.

    15. கருவறை கோஷ்டத்தில் பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. காரைக்கால் அம்மையார் தலைகீழாக நடப்பது போன்ற சிற்பம் அமைந்துள்ளது. அந்த சிற்பத்துக்கு நேராக 63 நாயன்மார்கள் கற்சிலை வரிசையில் காரைக்கால் அம்மையார் சிலையும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    16. கோஷ்டத்தில் சோமாஸ்கந்தருக்கு கீழே நாகம் ஒன்று சிவலிங்கத்தை வழிபடுவது, கண்ணப்பர் கண்ணை இமைக்கும் போது இறைவன் வெளிப்பட்டு தடுப்பது, ஒருதலையுடன் இரண்டு மான்கள் இருப்பது போன்ற சிற்பங்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் உள்ளன.

    17. கருவறை சுவர் முழுவதும் கல்வெட்டுகள் உள்ளன. மொத்தம் 67 கல்வெட்டுகள் இடம் பெற்றிருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    18. ஒரு கல்வெட்டில் அச்சரப்பாக்கத்தின் பெயர், "மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து தென்பால் தனியூர் அச்சிறுப்பாக்கம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    19. அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் சிறந்த பிரார்த்தனை தலம் மட்டுமல்ல மிக சிறந்த பரிகார தலமாகவும் திகழ்கிறது. எனவே பிரார்த்தனையும், பரிகாரமும் செய்யலாம்.

    20. இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

    21. ஆட்சீஸ்வரரை மனம் உருக வழிபட்டு நெய் தீபம் ஏற்றினால் பதவி உயர்வு தேடி வரும். அதோடு ஆட்சி செய்யக்கூடிய பதவிகள் கிடைக்கும்.

    22. பாண்டிய மன்னன் படை வீரர்களின் ஆயுதங்கள் பட்டு ஆட்சீஸ்வரர் தன்னை வெளிப்படுத்தினார். இதை பிரதிபலிப்பது போல ஆட்சீஸ்வரர் லிங்கத்தின் பின்புறத்தில் இன்னமும் வெட்டுத் தழும்பு காணப்படுகிறது.

    23. இந்த தலத்து 5 நிலை ராஜகோபுரம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. அது வெள்ளை நிறத்தில் இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த கும்பாபிஷேக திருப்பணியின் போது ராஜகோபுர சிற்பங்களுக்கு வர்ணம் பூசியுள்ளனர். இதனால் ஆட்சீஸ்வரர் ஆலயமே புதுப்பொலிவு பெற்று விட்டது போல காட்சி அளிக்கிறது.

    24. இந்த ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. ஆலயத்தை சுற்றி வரும் வெளிப்பிரகாரம் நன்கு விஸ்தாரமாக இருக்கிறது. இதனால் இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அங்கு அமர்ந்து ஓய்வு எடுக்கவும், அன்னதானம் சாப்பிடவும் நல்ல வசதி உள்ளது.

    25. சப்தமாதர்கள் சன்னதி முன்பு ஆலயத்தின் உள்பக்க பிரகாரத்தில் இருந்தது. தற்போது சப்தமாதர்கள் சன்னதி ஆலய அலுவலகம் அருகே இடம் மாற்றி கட்டப்பட்டுள்ளது.

    26. சித்திரை மாத பிரமோற்சவத்தின் போது சுவாமி&அம்பாள் திருக்கல்யாணம் நடத்த தனி மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் திருமண நிகழ்ச்சி நடத்துவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    27. வெளிப்பிரகாரத்தில் சில சன்னதிகள் கட்ட ஏற்பாடு செய்து பணிகளை தொடங்கி உள்ளனர். ஆகம விதிகள் இடம் கொடுக்கவில்லையோ, என்னவோ பிறகு அதை பாதியில் கை விட்டுள்ளனர்.

    28. தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் அடியில் மிகவும் அழகான பரமசிவன் பார்வதி சிற்பம் உள்ளது. ஆலயத்துக்கு வருபவர்களில் பலர் தங்கள் குழந்தையை அந்த சிற்பம் அருகில் நிறுத்தி புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.

    29. சிவனுக்கு எதிரில் நந்தி இருப்பது போல இந்த தலத்தில் பெருமாளுக்கு எதிரில் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். முக்கிய நாட்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    30. சிவபெருமானின் கண்ணீர் துளிகள் விழுந்த இடங்களில்தான் ருத்ராட்ச மரம் தோன்றியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் கண்ணீர் துளிகளில் ஒரு துளி இந்த தலத்தில் விழுந்து ருத்ராட்ச மரம் உருவானதாம். எனவே ருத்ராட்சம் தோன்றிய தலங்களில் ஒன்றாக அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

    • நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
    • கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சிஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளி பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் இருந்தது. இந்த நிலம் மற்றும் கட்டிடத்தினை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.

    இந்த நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லஷ்மி காந்த பாரதிதாசன் தலைமையில் கோவில் நிலங்கள் வட்டாட்சியர் தங்கராஜ், செயல் அலுவலர் மேகவண்ணன், சரக ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ஆட்சிஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகையும் அளவை கற்களும் வைக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.4 1/2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×