search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு மேய்க்க சென்ற"

    • சந்தோஷ் தாய் சரஸ்வதி போன் செய்து பார்த்த போது போன் எடுக்கவில்லை.
    • தண்ணீரில் இறங்கி பார்த்த போது சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையம் கிராமம் கருத்தி பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சந்தோஷ் (வயது 24). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    சந்ேதாஷ் காலை ஆடு மேய்க்க சென்றால் மாலை தான் வீடு திரும்புவார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தோஷ் தாய் சரஸ்வதி போன் செய்து பார்த்த போது போன் எடுக்கவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து வழக்கமாக ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்று பார்த்த போது தண்ணீர் தேங்கி பாறைக்குழி அருகில் சந்தோஷின் சட்டை, லுங்கி, செல்போன் இருந்தது. பின்னர் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் கொடுமுடி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு துறையினர் நேரில் வந்து தண்ணீரில் இறங்கி பார்த்த போது சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×