search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி"

    • தனது அக்கா கார்த்திகா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.
    • எதிர்பாராத விதமாக நிஷாந்த் தண்ணீ ரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்.

    டி.என்.பாளையம், 

    ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மகன் நிஷாந்த் (25), எம்.பி.ஏ. படித்துள்ளார். 

    நிஷாந்தின் அக்கா கார்த்திகாவுக்கு திருமணமாகி சத்தியமங்கலம் தேள்கரடு வீதியில் வசித்து வருகிறார். கடந்த 2 வாரத்திற்கு முன்பு நிஷாந்த் சத்தியமங்கலத்தில் உள்ள தனது அக்கா கார்த்திகா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு  நிஷாந்த் மட்டும் குளிக்க சென்றார். கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்கால் படித்துறை என்ற இடத்தில் நிஷாந்த் குளித்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நிஷாந்த் தண்ணீ ரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை.

    இதையடுத்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து பங்களாப்புதூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய நிஷாந்தை தேடினர். இதை தொடர்ந்து நிஷாந்தை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தோஷ் தாய் சரஸ்வதி போன் செய்து பார்த்த போது போன் எடுக்கவில்லை.
    • தண்ணீரில் இறங்கி பார்த்த போது சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையம் கிராமம் கருத்தி பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சந்தோஷ் (வயது 24). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    சந்ேதாஷ் காலை ஆடு மேய்க்க சென்றால் மாலை தான் வீடு திரும்புவார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தோஷ் தாய் சரஸ்வதி போன் செய்து பார்த்த போது போன் எடுக்கவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து வழக்கமாக ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்று பார்த்த போது தண்ணீர் தேங்கி பாறைக்குழி அருகில் சந்தோஷின் சட்டை, லுங்கி, செல்போன் இருந்தது. பின்னர் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் கொடுமுடி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு துறையினர் நேரில் வந்து தண்ணீரில் இறங்கி பார்த்த போது சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×