search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர் கோவில்களில்"

    • அனுமன் ஜெயந்தியையொட்டி வ.உ.சி.பூங்காவில் உள்ள மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
    • இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    அனுமன் ஜெயந்தியையொட்டி, ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஸ்ரீ மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

    முன்னதாக கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை அனுமனுக்கு கணபதி பூஜை மற்றும் அபிஷேகம் நடை பெற்றது. அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனக் காப்பு சாத்தப்பட்டது.

    அதிகாலை 5 மணி முதல் ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

    பக்தர்களுக்கு ஆஞ்ச நேயர் வார வழிபாட்டு குழு சார்பில் பிரசாதமாக லட்டும், நாள் முழுவதும் அன்ன தானமும் வழங்க ப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கீதா, தக்கார் அருள்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்டனர்.

    இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வழிபடுவதற்கு தனி வரிசையும், வழிபட்டு வெளியே செல்வதற்கு தனி வரிசையும் போட ப்பட்டிருந்தது. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல கள்ளுக்கடை மேடு ஆஞ்ச நேயர் கோவி லிலும் அனுமன் ஜெயந்தியை யொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். அனுமன் ஜெயந்தியை யொட்டி ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆஞ்ச நேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல் கோட்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில், சத்தி ரோட்டில் உள்ள கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாநகர் பகுதியில் உள்ள கோவி ல்களில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோபி செட்டிபாளையம் அமர்ந்த ராயர் கோவில் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவி லில் இன்று காலை பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பாரியூர் ஆதி நாராயண பெருமாள், மூலவாய்க்கால் ஸ்ரீதேவி, பூதேவி கரிவரத ராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு துளசி மாலை அலங் காரம் செய்யப்பட்டது.

    இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை வழி பட்டு சென்றனர். இதை யடுத்து பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் டி.என்.பாளை யம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி சஞ்சீவராயன் பெருமாள் கோவிலுள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து முழு சந்தனக்காப்பு பூசப்பட்டு, பால், தயிர், இளநீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 108 வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட மாலைகளும் அணிவிக்கபட்டது.

    இதையொட்டி ஆஞ்ச நேயரை தரிசிக்க அத்தாணி, பெருமுகை, கொண்டை யம்பாளையம், கள்ளி ப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், கோபி உள்ளிட்ட டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், பேட்டை பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்ச நேயருக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வட மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    சத்தியமங்கலம் பெரிய கோவிலில் உள்ள ஆஞ்ச நேயர், அம்மாபேட்டை காவிரிக்கரையில் அமைந்து உள்ள ஜெய ஆஞ்ச நேயர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஏராள மான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். அவர்களுக்கு பிரசாத மாக பொங்கல் மற்றும் சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் கவுந்தப்பாடி சந்தைபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்சநேயர் புளியம்பட்டி பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அல ங்காரம் செய்யப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை பால், தயிர், சந்தனம், விபூதி, உட்பட பல ேஹாம திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் செய்த னர்.

    அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது, இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், பக்த ர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்க ப்பட்டது.

    விழா எற்பாடுகளை சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் சிவக்குமார், பழனிவேலு ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.

    அதேபோல் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, பவானி, சித்தோடு, ஆப்பக் கூடல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்ச நேயர் ேகாவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×