search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் உண்ணாவிரதம்"

    • முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.
    • சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த. அமிர்த குமார், தலைமைச் செயலக பணியாளர் சங்க மேனாள் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் அகில இந்திய தலைவர் கே. கணேசன்,

    தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வே.மணிவாசகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவி சு. தமிழ்ச்செல்வி, தமிழ் மாநில அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மு. செ. கணேசன், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணி தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெ.சரவணன், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க மாநிலத் தலைவர் எஸ் மதுரம், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜெய.துரை, தமிழ்நாடு உயர் கல்வி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் டாக்டர்.இரா. மணிகண்டன், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சு.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    10 அம்சக் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கொடுத்தும், அதன் மீது கடந்த சட்டமன்ற தொடரில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

    எனவே அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுடைய பல லட்சம் வாக்குரிமை உள்ள குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மார்ச் 3-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அவர்கள் அறிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இரவிலும் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள்.
    • போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகம் கடந்த 6 நாட்களாக ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பரபரப்பு அடைந்துள்ளது.

    சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு ஆசிரியர் சங்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது.

    இன்னொரு சங்கம் தங்கள் ஆசிரியர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.

    ஒரே நேரத்தில் 3 சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் பலர் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார்கள்.

    விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இரவிலும் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள். நேற்று இரவில் பலத்த மழை பெய்ததால் டெண்டுகள் காற்றில் பறந்தது. அனைவரும் நனைந்தபடியே கார் பார்க்கிங், கட்டிடங்களின் திண்ணைகளில் ஒதுங்கி நின்றார்கள். மழை ஓய்ந்ததும் உண்ணாவிரத பந்தலை சரி செய்து மீண்டும் வந்து அமர்ந்தார்கள்.

    நேற்று வரை 65 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்சுகளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இன்றும் 35 பேர் மயங்கினார்கள்.

    25 ஆம்புலன்சுகள், நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

    போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள் மனம் தளராமல் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் 50 ஆசிரியர்கள் மயங்கி விழுந்த சூழல் மிகுந்த வருத்தமளிக்கிறது.

    தமிழக அரசு 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்களின் போராட்ட த்திற்கு மதிப்பளித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்தி, ஆசிரியர்களுக்கு உத்தரவாதம் அளித்து, உண்ணாவிரதத்தை கைவிடச் செய்து, நிரந்தரத் தீர்வு காணுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர்களின் உழைப்பை சுரண்டும் செயல்களில் அரசே ஈடுபடுவது நியாயமற்றது. கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் அவர்களின் உரிமைகளைக் கோரி போராடும் நிலைக்கு தள்ளுவதே அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம் ஆகும். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 4 ஆசிரியர் சங்கத்தினரும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 9 பேர் நேற்று இரவு மயங்கி விழுந்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (பழைய டி.பி.ஐ. வளாகம்) பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம், தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என பல்வேறு அலுவலகங்கள் அமைந்து உள்ள இந்த வளாகத்தில், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று அங்கு ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.

    ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், பழைய டி.பி.ஐ. வளாகம் நேற்று ஆசிரியர்களின் போராட்டக்களமாக மாறியது.

    'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இடை நிலை ஆசிரியர்கள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    இதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கங்களை சேர்ந்த சுமார் 600 ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளனர்.

    அவர்களில் பெரும்பாலானவர்களில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் உண்ணாவிரதத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை, டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம், பணி நியமனத்துக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வந்து இருந்தனர்.

    இவர்கள் தங்களுக்கு ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்களின் 3 விதமான போராட்டம் தொடங்கியது.

    ஒரு சாரார் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். மற்றொரு ஆசிரியர் சங்கத்தினர் தங்களுக்கு ஆசிரியர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இன்னொரு சங்கத்தினர் தங்களுக்கு வேலை வேண்டும் என்பதை பிரதானமாக கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றதால் பழைய டி.பி.ஐ. வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கப் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் கோரிக்கைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    4 ஆசிரியர் சங்கத்தினரும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு அவர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் இருந்து கலைந்து செல்லவில்லை. அங்கேயே படுத்து தூங்கினார்கள். இன்று காலை எழுந்து பல் துலக்கி விட்டு மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    அருகருகே அமர்ந்து உள்ள அவர்கள் இடையே இடையே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று காலை முதல் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் சேரும் பட்சத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    இதற்கிடையே, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 9 பேர் நேற்று இரவு மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 21 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், 27 பேர் பெண்கள். இன்று காலை வரை 30 பேர் மயங்கி விழுந்தபோதிலும் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

    இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்காக ஆம்புலன்சுகளும் தயாராக நிறுத்தப்பட்டு உள்ளன.

    • சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
    • கடந்த 18 ஆண்டுகளாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறோம்.

    சென்னை:

    சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    போராட்டம் பற்றி செயலாளர் சுந்தரபாண்டியன் கூறியதாவது:-

    கடந்த 18 ஆண்டுகளாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாக வைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

    இது தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கிலும் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் பதவி உயர்வு வழங்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏரானமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்றவர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் சத்தியானந்தன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட துணை செயலாளர் பானுமதி வரவேற்று பேசினார். முன்னாள் மாநில தலைவர் சுதாகரன் மாநில துணை செயலாளர் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தனர்.மாவட்ட செயலாளர் குப்புராஜன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியமத்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசிய கல்விக் கொள்கைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

    ஒரே நாடு ஒரே ஒரு கொள்கை என்ற 7-வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலனை ஆசிரியர்கள் முழுமையாக பெரும் வகையில் அரசு நேரடியாக அமல்படுத்த வேண்டும்.

    ஆசிரியர்கள் அவ்வப்போது சமூக விரோதிகளாலும் ஒழுங்கீன நடத்தை உள்ளவர்களாலும் தொல்லைக்கு ஆளாகி பாதுகாப்பு பெற்ற நிலையில் உள்ளனர் டாக்டர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.

    ×