search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஷ்விணி வைஷ்ணவ்"

    • அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்.
    • தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது.

    புதுடெல்லி :

    மத்திய தொலைதொடர்பு மந்திரி அஷ்விணி வைஷ்ணவ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் செல்போனுக்கு வருகிற 'ஸ்பாம்' அழைப்பு (திரளானோருக்கு வணிக நோக்கில் விடுக்கிற அழைப்பு) 'சைபர்' மோசடி (இணையதள குற்றம்) தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், "செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது. தங்களுக்கு தெரிந்த, அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்" என கூறினார்.

    மேலும் அவர், 'ஸ்பாம்' அழைப்புகள், 'சைபர்' மோசடிகள் போன்றவற்றைத் தடுப்பதற்காக தனது அமைச்சகம் 'சஞ்சார் சாதி' என்ற தளத்தை தொடங்கி இருப்பதாகவும், 40 லட்சத்துக்கும் மேலான தவறான 'சிம்' கார்டுகளும், 41 ஆயிரம் தவறான விற்பனை மைய ஏஜெண்டுகளும் கருப்பு பட்டியலிட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ×