search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலகத்தில் மனு"

    • அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
    • தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள வெள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கலப்பு திருமண தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது அருண்குமார் கூறியதாவது:-

    பெற்றோர் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனது உறவினரான தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×