search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவுரைகள்"

    • பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது.
    • குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100 ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட குடும்ப நலச் சார்பில் வாசக்டமி இரு வார விழா டிசம்பர் 4-ம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    இரு வார விழாவின் நோக்கமானது முதல் வாரத்தில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, மருத்துவக் கல்லூரி மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார அளவிளான அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசாரம் செய்ய அனைத்து நிலையங்களில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டு உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் முகாம் ஏற்பாடு செய்து அதிக எண்ணிக்கையில் தகுதியுள்ள தம்பதியர்களில் ஆண்கள் பங்கேற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் என்.எஸ்.வி. சிறப்பு முகாம் தொடக்கமாக வரும் 28-ந் தேதி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார மருத்துவனையிலும், 30-ந் தேதி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 2.11.2022 அன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100- ம் ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்களும், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ. 200-ம் தமிழ்நாடு அரசால் வழங்கபடுகிறது.எளிய பாதுகாப்பான வாசக்டமி மூன்றே நிமிடங்களில் கத்தியின்றி, தையல் இன்றி செய்யப்படுகிறது.

    ஆனந்த வாழ்க்கை பெற தடையில்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லை. கடின உழைப்பினை மேற்கொள்ளலாம். மயக்க மருந்து அளிபபதில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அளவான குடும்பத்தை அமைப்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பாகும்.

    இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் மலர்விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×