search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிமுக விழா"

    • சோழவந்தானில் ஆசிய சாம்பியன் ஆடவர் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா நடந்தது.
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்துகிறது.

    சோழவந்தான்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான 7-வது ஆடவர் ஆக்கி போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடை–பெற உள்ளது. இந்த போட் டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொ–ரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை தமிழ்நாடு முழுவ–தும் வலம் வர உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி சென்னை மெரினா–வில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டா–லின் அறிமுக விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர் நிகழ்வாக சோழவந்தான் கல்வி சர்வ–தேச பொதுப்பள்ளி மைதா–னத்தில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் வெற்றி கோப்பையை அறி–முகம் செய்யும் விழா நடந்தது. இவ்விழாவில் கல்வி குழுமம் தலைவர் டாக்டர். செந்தில்குமார் உதவி தலைமை ஆசிரியர்கள் அபி–ராமி, டயானா, பள்ளி மாணவர் தலைவர் அர்ஜூன், பள்ளி மாணவர் துணை தலைவர் பொற்கலை ரிஷிகா, பள்ளி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌஷிக், பள்ளி விளையாட்டுத்துறை துணை அமைச்சர் சனோஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரி–யைகள், மாணவ, மாணவி–கள் பங்கேற்றனர்.

    முன்னதாக கோப்பையை மாணவர்கள் கொடி பிடித்து ஊர்வலமாக மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கோப்பை தேனி மாவட்டத் திற்கு தொடர்ந்து பயணித்தது.

    • தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது.
    • மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    மதுரை

    மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது. ஆலாத் தூரில் உள்ள கணேஷ் மகாலில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கே.கே. செல்வகுமார் கலந்து கொண்டு தென்மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரை யாற்றுகிறார்.

    மாநில பொதுச் செய லாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப் பாளர் குரு மணிகண்டன் உள்பட தலைமை நிர்வாகி கள் பேசுகிறார்கள்

    இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட பொறுப் பாளர்கள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொள்கின்ற னர்.

    தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட பொறுப் பாளர் அறிமுக விழா விற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    • காலை, மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி.
    • கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி இலக்குகளை அடைய மாணவர்களுக்கு அறிவுரை.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ஃப்ரஷர்ஸ் டே வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    காலை மற்றும் மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினர்களாக ஜோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்ணிங் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, வழக்கறிஞர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தினர். 


    கல்லூரியின் இயக்குனர் எம்.வி.எம் சசிகுமார், கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.பாலாஜி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம். சசிகுமார் , ஆலோசகர்கள் பேராசிரியர். கே.ரசாக் மற்றும் வாசு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றனர்.

    மாணாக்கர்கள் தவறான பாதையில் சென்றுவிடாமல் மிகுந்த ஒழுக்கத்துடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ். சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். 

    • திருச்சி மாவட்டம் துறையூரில் நாளை ஏற்றுமதி நிறுவனத்தின் புதிய உணவு பொருட்கள் அறிமுக விழா நடைபெற உள்ளது
    • பனானா பால் மிக்ஸ், பாதாம் பால் மிக்ஸ்,கேரட் பால் மிக்ஸ், பீட்ரூட் பால் மிக்ஸ், மசாலா பால் மிக்ஸ் போன்ற புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படுகிறது

    திருச்சி:

    எஸ்.எம். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் புதிய உணவுப் பொருட்கள் அறிமுக விழா நாளை (8-ந்தேதி, திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு துறையூர் ரோட்டரி சங்கத்தில் நடக்கிறது. இதில் பனானா பால் மிக்ஸ், பாதாம் பால் மிக்ஸ்,கேரட் பால் மிக்ஸ், பீட்ரூட் பால் மிக்ஸ், மசாலா பால் மிக்ஸ் போன்ற புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதனை திருச்சி மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் டாக்டர் கே.சீனிவாசன் வெளியிடுகிறார்.

    அந்த புதிய பொருட்களை துறையூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, முன்னாள் தலைவர் வி.ஸ்ரீதர், செயலாளர் என்.தில்லைநாயகம், பொருளாளர் ஏ.துரைராஜ்,

    துணை ஆளுநர் கே.மணிகண்டன், துறையூர் கோல்டன் ரோட்டரி சங்கத்தின் மண்டல செயலாளர் (நிர்வாகம்) எஸ்.அசோக் பெரியசாமி ஆகியோர் அதனை பெற்றுக் கொள்கிறார்கள்.

    இதில் துறையூர் ஷாலம் பவுண்டேஷன் கே.கே.மாரிமுத்து, எம்.தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    முடிவில் திருச்சி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி எம்.மஞ்சு நன்றி கூறுகிறார்.

    ×