search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறங்காவலர் குழு தலைவர்"

    • தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது.

    அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.

    இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

    கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

    மேலும் உள்ளூர்காரர் என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கருதப்படுகிறது. வரும் 16-ந் தேதிக்குள், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து முதல்வர் ஜெகன் ஆலோசித்து வருகிறார்.

    இதில் தமிழகம், கர்நாடகம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரின் நியமிக்கப்பட உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 81,472 பேர் தரிசனம் செய்தனர். 34,820 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒவ்வொரு மாதமும் அமைச்சர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்கின்றனர்.
    • மாசி திருவிழாவிற்கு கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒவ்வொரு மாதமும் அமைச்சர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்கின்றனர்.

    வளர்ச்சி திட்ட பணிகள் ஒவ்வொரு நிலையாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக 130 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகள் கோவிலில் பல இடங்களில் நடந்து வருவதால் இதற்கு மேல் கழிப்பிடங்கள் அமைக்க முடியவில்லை.

    மாசி திருவிழாவிற்கு கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளால், ஓராண்டில் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறிவிடும். பணிகளை பார்வையிட முதல்-அமைச்சர் வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • துறையூர் நகர தி.மு.க. செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவராக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்.
    • இந்நிகழ்ச்சிக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

    திருச்சி :

    தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் வழிபாடு மற்றும் அனைத்து செயல்பாடுகளும் தாமதம் இன்றி நடைபெற அறங்காவலர் குழுக்களை நியமனம் செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அந்த வகையில் துறையூர் நகர தி.மு.க. செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவராக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். இதில் போது மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவராக மெடிக்கல் முரளி மற்றும் நான்கு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி,

    இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் லட்சுமணன், ரவிச்சந்திரன், ஹரிஹர சுப்பிரமணியன், துறையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மாவட்ட பிரதிநிதி மதியழகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×