search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாச்சலா"

    • கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    மணவாளக்குறிச்சி:

    வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஐ.இ.டி. கன்னியாகுமரி நெட்வொர்க் மற்றும் அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில் 172 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக காட்சிப்படுத்திய மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் துணை தாளாளர் சுனி, இயக்குநர் தருண்சுரத், அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வரும், ஐ.இ.டி.கன்னியாகுமரி நெட்வொர்க்கின் முன்னாள் தலைவருமான ஜோசப் ஜவகர், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில்
    • புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி யில் புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செயற்கை தொழில் நுட்பம் மற்றும் தரவு அறிவியல் துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு மாதிரிகளை கண்காட்சிக்கு வைத்திருந்த னர்.இதனை பின்ஒஸ் மென் பொருள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்கு னரும் பொறியாளருமான அருண் ராஜிவ் சங்கரன் தொடங்கி வைத்து மாணவி களுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முறைகள் பற்றி பயிற்சியளித்தார்.

    கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நுண்ணறிவு தொழில் நுட்பம் எதிர் காலத்தில் அனைவராலும் பயன்படுத்த கூடிய தொழில் நுட்பமாகும். எனவே மாணவிகள் இந்த தொழில் நுட்பத்தில் திறமை யை வளர்த்து கொண்டால் எதிர் காலத்தில் சிறந்து விளங்கலாம் என கூறினார்.

    கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்தி பேசினார். மேலும் இந்த கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவி களுக்கு கேடயமும், சான்றி தழ்களும் மற்றும் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களும் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் தருண் சுரத், துறை தலைவி சுனிதா, நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் பேரா சிரியை செரினா மற்றும் பெனடிட் டோனா, பேரா சிரிய-பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    ×