search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு தொழிற் நுட்பக் கல்லூரியில்"

    • விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.

    ஈரோடு, 

    பெருந்துறை அரசு தொழிற் நுட்பக் கல்லூரியில், 2023- 2024 -ம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இக்கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய 5 முழுநேரப் பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடி-பட்டியல்(எஸ்.சி.-எஸ்.டி) பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் இல்லை.

    முதலாமாண்டு டிப்ளமோ சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ×