search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students can apply"

    • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
    • பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    ஈரோடு, 

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கான, 2 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

    விருப்பம் உள்ளோர் வரும் 5-ந் தேதி முதல் 15-ந தேதி வரை, https://scert.tnschool.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரத்தை, இணைய தளத்திலும் அறியலாம். தமிழ், தெலுங்கு, உருதில் ஏதாவது ஒன்றை பயிற்சி மொழியாக கொள்ள விரும்புவோர், பிளஸ்-2 வில் மொழி பாடமாக படித்திருக்கவேண்டும். ஆங்கில வழியில் பயில விரும்புவோர், பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றப்படுகிறது. பொதுப்பிரிவு, பிறர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது, கட்டண சலுகை உள்ளது. உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.

    ஈரோடு, 

    பெருந்துறை அரசு தொழிற் நுட்பக் கல்லூரியில், 2023- 2024 -ம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இக்கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய 5 முழுநேரப் பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடி-பட்டியல்(எஸ்.சி.-எஸ்.டி) பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் இல்லை.

    முதலாமாண்டு டிப்ளமோ சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன
    • விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பள்ளி மாணவர் விடுதிகள்-5, பள்ளி மாணவியர் விடுதிகள் -4, கல்லூரி மாணவர் விடுதி -1, கல்லூரி மாணவியர் விடுதிகள் -3 ஆகும்.

    பள்ளி விடுதிகளில் 4 -ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவர்/மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவர்/மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவர்/மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்/மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

    தகுதியுடைய மாணவ /மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

    கல்லூரி விடுதி களைப் பொருத்தவரை 31.7.22-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே மாணவ -மாணவியர் அரசின் சலுகைகளை பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×