search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teacher Training Course"

    • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
    • பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    ஈரோடு, 

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கான, 2 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

    விருப்பம் உள்ளோர் வரும் 5-ந் தேதி முதல் 15-ந தேதி வரை, https://scert.tnschool.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரத்தை, இணைய தளத்திலும் அறியலாம். தமிழ், தெலுங்கு, உருதில் ஏதாவது ஒன்றை பயிற்சி மொழியாக கொள்ள விரும்புவோர், பிளஸ்-2 வில் மொழி பாடமாக படித்திருக்கவேண்டும். ஆங்கில வழியில் பயில விரும்புவோர், பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றப்படுகிறது. பொதுப்பிரிவு, பிறர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது, கட்டண சலுகை உள்ளது. உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×