search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கட்டிடங்கள்"

    • விழாவுக்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் குதிரைமொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சாமிநாதன், உடன்குடி யூனியன் ஆணையாளர் பழனிசாமி, ஊராட்சி தலைவர் சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மீன்வளம். மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி தலைவரும், உடன்குடி நகர தி.மு.க. செயலாளருமான சந்தையடி மால்ராஜேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் மனப்பாடு ஜெயபிரகாஷ், மெஞ்ஞானபுரம் ராஜபிரபு, முபாரக், ஒன்றிய பொருளாளர் விஜயன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் மோகன், குதிரைமொழி ஊராட்சி செயலாளர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
    • விரைவில் திறக்க ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த பெரியகிளம்பாடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக வளாகம் மற்றும் காரியமேடையை சரவணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    கீழ்ப்பனவத்தூர் தொகுதியில் எனது சொந்த கிராமம் வந்தாலும் துணை சபாநாயகர் பிச்சாண்டி எனது கிராமத்தை தன்னிறவு அடையும் வகையில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை தந்துள்ளார்.

    அதன் அடிப்ப டையில் புதிதாக ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலகமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காரிய மேடையும் தற்போது கட்டப்பட்டு வருகிறது.

    இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளது.

    மேலும் பஞ்சாயத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் முக்கிய தேவைகள் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் அடிப்படையில் விரைவாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி, துணைத்தலைவர் ராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×