search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க பாராளுமன்ற தேர்தல்"

    • தற்போது ஜோ பைடனுக்கு 80 வயதாகிறது.
    • அமெரிக்க மக்களுக்கு நான் நேர்மையாக இருப்பேன்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி அவர் அளித்த பேட்டியில், "அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் இது குறித்து நான் உறுதியான முடிவு எடுக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கு எனக்கு உடல்நலப் பிரச்சினை தடையாக இருந்தாலும், அமெரிக்க மக்களுக்கு நான் நேர்மையாக இருப்பேன்" என்று கூறினார்.

    தற்போது ஜோ பைடனுக்கு 80 வயதாகிறது. அடுத்த ஆண்டு அவருக்கு 81 வயதாகி விடும். ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பது, அந்தப் பதவிக்காக ஜனநாயகக்கட்சியில் போட்டியிட ஆர்வமாக உள்ள நிக்கி ஹாலே உள்ளிட்டவர்களை அதிர வைத்துள்ளது.

    குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ள டொனால்டு டிரம்புக்கு அப்போது 77 வயதாகி விடும்.

    • அமெரிக்காவில் 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.
    • இவர்களில் 4 பேர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவில் வருகிற 8-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

    இந்த நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் 4 பேர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், தங்களின் பதவியை தக்கவைக்க மீண்டும் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

    அவர்கள் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆவர். இவர்கள் 4 பேரும் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். 57 வயதான அமி பெரா பிரதிநிதிகள் சபைக்கு 6-வது முறையாகவும், ரோ கண்ணா (46), ராஜா கிருஷ்ணமூர்த்தி (49) மற்றும் பிரமிளா ஜெயபால் (57) 4-வது முறையாகவும் போட்டியிடுகின்றனர். இவர்களில் பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பதும், பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே இந்திய வம்சாவளி பெண் ஆவார்.

    இவர்கள் 4 பேரையும் தவிர்த்து மிச்சிகன் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ தானேதர் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார். இவரும் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். இவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் 5-வது இந்தியராக இருப்பார்.

    • தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
    • டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் வரும் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெலிவிஷனில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்க தேர்தல் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால், அது நாட்டை குழப்பத்துக்கான பாதையில் தள்ளிவிடக்கூடும். இது இதுவரை நடக்காதது. இது சட்டவிரோதமானது. இது அமெரிக்காவுக்கும் எதிரானது.

    தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

    முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.

    2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றது என்று டிரம்ப் சொல்கிற பெரிய பொய்தான், 82 வயதான சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி மீதான தாக்குதலுக்கும், நாடாளுமன்ற தாக்குதலுக்கும் காரணம் ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளில் அரசியல்வன்முறை மற்றும் வாக்காளர்கள்மீதான அச்சுறுத்தலுக்கும் இந்தப் பொய்தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இதை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி நிராகரித்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கெவின் மெக்கார்த்தி கூறுகையில், "ஜனாதிபதி பைடன் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஏனென்றால் அவர் தனது விலைவாசி உயர்வுகளுக்கு வழிவகுத்த தனது கொள்கைகள் பற்றி அவரால் பேச முடியாது" என தெரிவித்தார்.

    ×