search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுபவம்"

    • விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.
    • பெண்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி இலக்கிய அமர்வு நிகழ்ச்சி வேதாரண்யம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை ஆய்வு மாணவி.சுகன்யா, சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தினமும் 120 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்து மீன் வியபாரம் செய்யும் பஞ்சவர்ணம், பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு, சிறுதானிய உணவு தயாரிப்பில் முனைப்பு காட்டும் கத்தரிப்புலம் சித்ரா ஆகியோர் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    இவர்களை அரசு கல்லூரி பேராசிரியர் மாரிமுத்து, சமூக செயல்பாட்டாளர் ஆசிரியை வசந்தா ஆகியோர் பாராட்டி பேசினர். மேலும், கல்லூரி மாணவி நித்யா, கோவி.ராசேந்திரன், ஆசிரியர் சதீஷ் உள்ளிட்டோர் பெண்ணியம் சார்ந்த பாடல்கள் பாடினர்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர் பிராபாகரன், கலை இலக்கிய பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் கைலாசம், மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, கார்த்தி, ஆசிரியர் சத்யராஜ், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வ ராசு, கிளை துணை செயலாளர் செந்தில்நாதன், மணி வண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

    • ஐடிஐ-ல் இரு ஆண்டுகள் படித்தால் உடனடியாக வேலை தயாராக உள்ளது.
    • நல்ல தோ்ச்சியும், அனுபவமும் பெற்று வரும் ஐடிஐ மாணவா்களை வரவேற்க நாடு காத்து கொண்டிருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் ( ஐ.டி.ஐ) கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தொழிலாளா் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 91 அரசு ஐ.டி.ஐ.களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக தமிழக முதல்வா் ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்தாா். இதில், தஞ்சாவூா் ஐ.டி.ஐ.க்கு ரூ. 30 கோடி வழங்கப்பட்டது.

    ரஷியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற வெளி–நாட்டு மாணவா்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ மாணவா்களும் ரோபோடிக்ஸ், ஆட்டோ–மேஷன் போன்ற நவீன முறைகளில் பயிற்சி பெறும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும், 71 ஐ.டி.ஐ-களில் தலா ரூ. 3.70 கோடியில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காகக் கட்டுமானமும் நடைபெறுகிறது.

    இப்பணி முடிந்த பிறகு நவீன வசதி, தொழில்நுட்பங்களுடன் மாணவா்கள் படிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    தமிழகத்திலுள்ள அரசு ஐ.டி.ஐகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை 93 சதவீதமாக உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் ஐடிஐ-களில் இடமே கிடைக்காத நிலை ஏற்படும்.

    ஐடிஐ-இல் படிக்கும் மாணவா்களுக்கு மட்டுமே படித்து முடித்தவுடன் வேலை காத்துக் கொண்டிருக்கிறது. பெயிண்டா், ஏசி மெக்கானிக், எலக்டிரிசியன், பிளம்பா் போன்ற பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    பெரிய நிறுவனங்களில் இதுபோன்ற பணிக்கு ஆள்கள் கிடைக்காமல் அலைகின்றனா்.

    எனவே, ஐடிஐ-ல் இரு ஆண்டுகள் படித்தால், உடனடியாக வேலை தயாராக உள்ளது. நல்ல தோ்ச்சியும், அனுபவமும் பெற்று வரும் ஐடிஐ மாணவா்களை வரவேற்க நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் இதுவரை 70 இடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 1.15 லட்சம் இளைஞா்களுக்கு தமிழ்நாடு அரசு பணிவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னா், அவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவர்–களுக்கு பணி நியமன ஆணை வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திர–சேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடந்தது
    • முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    என்.ஜி.ஓ.காலனி அருகே உள்ள சீயோன்புரம் எல். எம். எஸ். மேல்நிலைப் பள்ளியில் 1992 -1994 கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவர்களும், அவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியர்கள், குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி "சுவடுகள் பதிப்போம்" என்று சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் புவிராஜன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர் சசிகுமார், மாணவி ரெஸா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். கலந்துரையாடலில் முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியர்கள் சார்லஸ் தேவசிகாமணி, சஜீவ பிரகாசதாஸ், புனிதவதி, ஷீலாஷியாம், வசந்தா அன்னபெல், கிரேஸ்லின் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.விழாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. பின்னர் ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களுக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.முன்னாள் மாணவர் வழக்கறிஞர் ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    ×