search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுசரிப்பு"

    • பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர், ராணுவத்தினருக்கு வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
    • ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர், ராணுவத்தினர், துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் பணியின் போது உயிரிழந்த காவலர்கள், வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

    தஞ்சை சரக்க டி.ஐ .ஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

    • முன்னாள் முதல்வர் ஓமந்தூரர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி நகர் அரிமா சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 52-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

    இதில் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் பாலாஜி, வாடிப்பட்டி லயன்ஸ் தலைவர் சிவசங்கரன், முன்னாள் செயலாளர் குருசாமி, முன்னாள் பொருளா ளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

    ×