search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல் காற்றுடன்"

    • காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது.
    • மதியம் 12 மணி முதல் 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி வந்தனர்.

    இந்நிலையில் கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, கொடு முடி போன்ற புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதி களிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட த்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய பிறகு ஓரளவு மழை பெய்ததால் வெப்பம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.

    காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    இந்த நேரத்தில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் புழுக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மோர், இளநீர், கரும்பு பால் ஆகியவற்றை விரும்பி பருகி வருகின்றனர். இதேபோல் தர்பூசணி, வெள்ளரிக்காய் வியாபாரமும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    வெயில் அதிகமாகி உள்ளதால் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் அதிக அளவில் வருகிறது. உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    முடிந்த அளவு குழந்தைகள், முதிய வர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    எனினும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எப்போது அக்னி நட்சத்திரம் வெயில் முடியும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிரு க்கின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிப்ப தற்காக பொதுமக்கள் இளநீர், கரும்பு ஆகியவற்றை விரும்பி அருந்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    பொதுவாக மே மாதம் தொடக்கத்திலிருந்து கடைசி வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.

    ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தை தொடுகிறது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

    அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பேன் இயங்கி கொண்டே இருக்கி றது.

    மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.

    வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிப்ப தற்காக பொதுமக்கள் இளநீர், கரும்பு ஆகியவற்றை விரும்பி அருந்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக இளநீர் கரும்பு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இதேபோல் தர்பூசணி பழ வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நீர்ச்சத்து நிரம்பியுள்ளதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும் என்ப தால் தர்பூசணி வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது.

    தற்போது மார்ச் மாதம் தான் தொடங்கியுள்ளது இப்போதே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வரும் மே மாதம் தொடக்கத்தில் அக்னி நட்சத்திர வெயில் வர இருக்கிறது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும். 

    ×