search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனந்தபுரி"

    • பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது.
    • ‘டிரிசர்வ்டு’ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

    செங்கோட்டை:

    ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் 'டிரிசர்வ்டு' (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரெயிலில் (16723) அக்டோபர் 19-ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ்11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் நெல்லை- கொல்லம் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி ரெயிலில் (16724) அக்டோபர் 20-ந் தேதி முதல் எஸ்11 என்ற பெட்டி கொல்லம்-நெல்லை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும்.

    மேலும் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரெயில்களில் (16851/16852) எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக்டோபர் 24-ந் தேதி முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயும் அக்டோபர் 26 -ந் தேதி முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும். அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரெயிலில் (16235) அக்டோபர் 28 -ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

    இந்த 'டிரிசர்வ்டு'ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூ.70, முன்பதிவு கட்டணம் ரூ.145, டிரிசர்வ்டு கட்டணம் ரூ.110 என வரையறுக்கப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும்
    • ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:


    விஜய்வசந்த் எம்.பி. அலுவலக செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


    குமரி மாவட்டத்தில் நிலவி வரும் பல்வேறு ரெயில்வே பிரச்சினைகள் குறித்து நேற்று விஜய்வசந்த் எம்.பி. சென்னையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, முதன் மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா ஆகிேயாரை சந்தித்து மனு அளித்தார்.


    மனுவில் கன்னி யாகுமரி வழித்தடத்தில் புதிய ரெயில் இயக்க வேண்டும், இரட்டை ரெயில் பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், கன்னியாகுமரியிலிருந்து வேளாங் கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும், ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை விஜய்வசந்த் எம்.பி. முன் வைத்தார்.

    மேலும் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    ×