என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனகோண்டா"
- சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.
- நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு வந்த ஒரு பயணி ஒரு பெரிய சூட்கேசை கொண்டு வந்தார். சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.அப்போது அதில் வெள்ளி நிற பைகள் இருந்தது. இதையடுத்து அந்த பைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 10 அனகோண்டா பாம்பு குட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சூட்கேசை கொண்டு வந்த நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து வனத்துறை தகவல் தெரிவித்தனர். அவர்கள் 10 அனகோண்டா பாம்பு குட்டிகளை பறிமுதல் செய்து, பாம்புகளை கடத்தி வந்த நபர் மீது வனவிலங்கு கடத்தல் பிரிவு மற்றும் சுங்க இலாகா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்