search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் முய்சு"

    • நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி.
    • தேசத்திற்கே பெரிய இழப்பாக மாறிவிடும்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாலத்தீவு நாட்டின் ஜூம்ஹூரீ கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார்.

    முன்னதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், குவாசிம் இப்ராஹிம் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு நாடாகவும் இருக்கட்டும், குறிப்பாக அண்டை நாடு பற்றியும், உறவில் விரிசல் ஏற்படும் வகையிலும் நாம் பேசக்கூடாது. நம் நாட்டிற்கென கடமை உள்ளது, அதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கடமையை கருத்தில் கொண்டுதான் ஜனாதிபதி சொலிஹ் இந்தியா அவுட் பிரசாராத்திற்கு தடை விதித்தார்."

    "இந்த தடை உத்தரவை அதிபர் முய்சு ஏன் ரத்து செய்யவில்லை என முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி உத்தரவை ரத்து செய்யக் கூடாது, இது தேசத்திற்கே பெரிய இழப்பாக மாறிவிடும். இப்படி நடக்கக்கூடாது. இப்படி செய்யாதீர்கள் என முய்சுவிடம் நான் கூறுவேன். மேலும், சீனா பயணத்திற்கு கூறிய கருத்துக்களுக்கு, முகமது முய்சு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×