search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிநவீன தொழில்நுட்பம்"

    • 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிக்னல் அமைத்துள்ளனர்.
    • ரிமோட் மூலம் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அவிநாசி ூ

    அவிநாசியில் போக்குவரத்து போலீசார் பெரும் முயற்சி எடுத்து தனியார் பங்களிப்பு மூலம் ஏறத்தாழ, 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிக்னல் அமைத்துள்ளனர். அவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இது குறித்து போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்ததாக எல்.இ.டி., சிக்னல்கள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அவினாசியில் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ரோடு, புதிய பஸ் நிலையம் , மங்கலம் ரோடு, சேவூர் ரோடு ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் 'டைமருடன்' சிக்னல், சுதந்திரநல்லூர் கணினி ஜங்ஷன், மங்கலம் ரோடு ரவுண்டானா, மேட்டுப்பாளையம் பிரிவு, சூளை பிரிவு, கால்நடை மருத்துவமனை, சீனிவாசபுரம், டி.எஸ்.பி., ஆபீஸ், மேற்கு ரத வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், நெடுஞ்சாலை மற்றும் சுற்றுலா பயணியர் மாளிகை அருகில்.

    புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் சாலையை கடப்பதற்கான சிக்னல், கைகாட்டி பிரிவு, திருப்பூர் ரோட்டில் பைபாஸ் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக நான்கு இடங்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இன்னும் 20 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளிலும் சிக்னல் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பின் எஸ்.பி., பங்கேற்று பயன்பாட்டிற்கு அளிக்க உள்ளார்.

    ×