search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் திடீர் சோதனை"

    • ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அனைத்து பகுதிகளிலும் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் பலநாட்கள் வைத்து அதை மக்களுக்கு விற்பனை செய்வதாகவும்,

    கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    இதனையடுத்து தேனி மாவட்ட உணவுபாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் தலைமையிலான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் கவுதமன் மீன்வள ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மீன்கள்களில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்டு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர்.

    இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுமார் 7 கிலோ கெட்டுப்போன மீன்கள் ரசாயன திரவம் ஊற்றி அழிக்கப்பட்டது.

    மேலும் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியா பாரிகளை எச்சரித்தனர்.

    • திண்டுக்கல் கிளை சிறைச்சாலையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டபதாக புகார் எழுந்தது.
    • லஞ்சஒழிப்புத்துறை போலீசார் மற்றும் அதிகாரிகள் சிறைக்குள் சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கிளை சிறைச்சாலையில் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் லஞ்சம் கேட்பதாகவும், கைதிகளுக்கு உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களை முறையாக வழங்காமல் பதுக்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியின் மனைவி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க வந்தபோது அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சம்பவத்தன்று கைதிகளுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் ேமாதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட கைதிகளை வெவ்வேறு அறையில் பிடித்து அடைத்து வைத்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு டி.ஐ.ஜி கடிதம் அனுப்பியிருந்த நிலையில் மதுரை சிறை கண்காணிப்பாளர்(பொ) வசந்தகண்ணன் திண்டுக்கல் சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    மேலும் லஞ்சஒழிப்புத்துறை போலீசாரும் சிறைக்குள் சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர். ஒவ்வொரு கைதியிடமும் தனித்தனியாக சென்று விசாரணை நடத்திய போலீசார் புகார்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து திண்டுக்கல் சிறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தவும், சி.சி.டி.வி காமிராக்கள் மூலம் கண்காணிக்கவும் வேண்டும் என்று கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×