search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி பணி"

    • மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்- சி, டி தரத்திலான பதவிகளுக்கு இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.
    • ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022-க்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    சேலம்:

    மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்- சி, டி தரத்திலான பதவிகளுக்கு இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பு தரத்திலான பதவி இடங்களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022-க்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதையடுத்து டயர் -1 தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வான டயர் -2 தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். டயர் -2 தேர்வு கடந்த மாதம் 26-ந்தேதி நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வர்கள் தாங்கள் எழுதிய டயர்-2 விடைத்தாள் மற்றும் கேள்விக்கான அதிகாரபூர்வ விடைகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள இவற்றின் லிங்கை கிளிக் செய்து, பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வின்போது ஒவ்வொரு கேள்விக்கும் தாங்கள் எழுதிய விடைகள் இதில் சரிபார்த்து கொள்ளலாம். இதைத்தவிர தேர்வர்கள் எழுதிய தங்களது பதில் தாள்களை பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.

    இந்த வசதி நாளை (6-ந்தேதி) மாலை 6 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விடைத்தாள், கேள்விக்கான விடைகள் ஆகியவற்றை இணைய தளத்தில் பார்க்க முடியாது.

    ×