search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகமாக மது குடித்த"

    • அமர் அதிக அளவில் மது குடித்துவிட்டு சோளங்கா பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்
    • சோளங்கா பாளையம் மதுக்கடைக்கு செல்லும் வழியில் உள்ள இட்டேரி வண்டிப்பாதையில் அமீர் இறந்து கிடப்பது தெரிய வந்தது

    ஈரோடு,

    மகாராஷ்டிர மாநிலம், தனோரா, வார்டு எண் -3 ஐ சேர்ந்தவர் அமர் (28). இவரது தம்பி சாகர் தத்து பவன் (25). இருவரும் கடந்த ஒரு வருடமாக, ஈரோடு அடுத்துள்ள சோளங்கா பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தனியார் தொழிற் சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர்.

    மதுவுக்கு அடிமையான அமர் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு சுற்றிக் கொண்டிருந்து ள்ளார்.

    தம்பி சாகர் தத்து பவன், அண்ணன் அமருக்கு அறிவுரைகள் கூறி வந்துள்ளார். இதனால், அமர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றாதா கவும் தெரிகிறது.இந்த நிலை யில், கடந்த 2 நாள்களாக அமர் அதிக அளவில் மது குடித்துவிட்டு சோளங்கா பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

    நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் போதையில் தள்ளாடியவாறு மீண்டும் அமர் மதுக்கடைக்கு செ ன்றதை சாகர் தத்து பவன் பார்த்துள்ளார்.

    ஆனால், நேற்று காலை 10 மணி வரையில் அமர், அவரது குடியிருப்புக்கு வரவில்லை. இதையடுத்து, சாகர் தத்து பவன், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மேற்பா ர்வையாளருடன் அமீரை தேடிச் சென்று ள்ளார்.

    அப்போது, சோளங்கா பாளையம் மதுக்கடைக்கு செல்லும் வழியில் உள்ள இட்டேரி வண்டிப்பாதையில் அமீர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அருகில் சென்று பார்த்தபோது, அமீர் இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து, சாகர் தத்து பவன் அளித்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் அடுத்த திருகண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் வசந்த் (28). இவர் பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் உள்ள ஒரு டைரி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு குடி பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×