search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகமாக மது குடித்த வாலிபர் சாவு
    X

    அதிகமாக மது குடித்த வாலிபர் சாவு

    • அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் அடுத்த திருகண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் வசந்த் (28). இவர் பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் உள்ள ஒரு டைரி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு குடி பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×