search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதிகள் இல்லை"

    • மழைக்காலங்க களில் பள்ளி வளாகத்தி லேயே மழைநீர் ஒழுகுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
    • அதைவிட ஒரு படி மேலாக பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதியில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்கு உள்ளான விஷயம்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஹள்ளி பகுதியில் அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு அரசு தொடக்க பள்ளியில் 80 மாணவ, மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் 124 மாணவ, மாணவிகளும் பயின்று வரு கின்றனர்.

    இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகள் அதிகம் என்பதால் பத்து ஆண்டு களுக்கு முன்பே இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது.

    ஆனால் இன்று வரை அவற்றுக்கான கூடுதல் கட்டிடங்களோ, போதுமான இடவசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்கப்படவில்லை.

    கட்டிடத்தில் வகுப்பறை பற்றாக்குறை, இடபற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மற்ற உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

    இதனால் சேர்க்கை விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் இப்பள்ளியில் முக்கிய பிரச்சனைகளாக பழைய கட்டிடங்களில் இருந்து கான்கிரீட் மேல் தளங்கள் தினம் தினம் இடிந்து விழுந்து வருகின்றது.

    இதனால் மாணவ மாணவிகள் அச்சத்துடனே தினம்தோறும் பள்ளிக்கு வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்ககளில் பள்ளி வளாகத்திலேயே மழைநீர் ஒழுகுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    அதைவிட ஒரு படி மேலாக பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதியில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்கு உள்ளான விஷயம்.

    மாணவர்களுக்கான கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும், தண்ணீர் வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கின்றது.

    இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்காக அருகில் உள்ள ஏரிகள் முட்புதர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கழிவறைகள் இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருவதன் காரணமாகவே பல பெண்கள் இப்பள்ளியில் சேர்பதை பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர்.

    அவ்வாறு ஓரிரு மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்தாலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் தங்கள் வீடுகளுக்கு சென்று பயன்படுத்திவிட்டு வர வேண்டிய சூழலும் நிலவி வருகிறது.

    கிராமப்புறங்களில் திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாலே பல மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உள்ளூரில் உள்ள பள்ளிகளை தவிர்த்து விட்டு தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    மேலும் இப்பள்ளியில் தினம் தினம் இடிந்து விழும் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டி குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஆண்டிபட்டியில் மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
    • இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை-போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து கடந்த 15-ந் தேதி முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள ஆண்டிபட்டி பகுதி மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டதால் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.

    மதுரையில் இருந்து தினசரி காலை 9.24 மணிக்கும், சென்னையில் இருந்து வாரம் 3 முறை இயக்கப்படும் குளிர்சாதன விரைவு ரெயில் காலை 8.20 மணிக்கும் ஆண்டிபட்டிக்கு வருகிறது.

    இதேபோல் மதுரைக்கு மாலை 6.34 மணிக்கும், சென்னைக்கு இரவு 9.10 மணிக்கும் ரெயில்கள் திரும்பி செல்கின்றன. இந்தநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ரெயில் நிலையம் பூட்டப்படுகிறது. ஆண்டிபட்டி ரெயில் நிலையத்தை கடந்து ஏராளமான பொதுமக்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து முன்கூட்டியே வரும் பயணிகள் ரெயில் நிலையம் பூட்டப்பட்டு ள்ளதால் வெளியிலேயே காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிபட்டி பகுதியில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×