search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி கட்டிடம்"

    • புங்கனூர் அங்கன்வாடி கட்டிடம் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது
    • அங்கன்வாடியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தப்பினர்.

    திருச்சி

    திருச்சி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பஞ்சாயத்து அலுவலகம் அங்கன்வாடி கட்டிடம் ரேஷன் கடை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடங்களுக்கு மத்தியில் தென்னை மரங்கள் புளிய மரங்கள் இருக்கின்றன.

    அவற்றில் ஒரு தென்னை மரம் மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று இரவு அங்குள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் மீது முறிந்து விழுந்தது. இந்த கட்டிடம் ஒடுகளால் வேயப்பட்டது என்பதால் கட்டிடத்திற்கு பெரிய சேதம் ஏற்படவில்லை.

    அத்துடன் மரத்திலிருந்த தேங்காய்கள் மற்றும் இளநீர்கள் தெறித்து அருகில் இருந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பால் சங்க கட்டிடங்களில் விழுந்துள்ளது. இரவில் விழுந்ததால் அங்கு பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் மற்றும் ரேசன் கடை, பால் சங்க கட்டிடத்திற்கு பால் வாங்க வரும் பொதுமக்கள், அங்கன்வாடியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தப்பினர்.

    மரம் முறிந்து விழுந்ததை அறிந்த புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் உடனடியாக அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் பழுதடைந்த மரங்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக அப்புறப்படுதவும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    • விஜயரெகுநாதபட்டி அங்கன்வாடி மையம் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது
    • தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரெகுநாதபட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பினர். தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

    சிதலமடைந்த அந்த கட்டிடத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும் சிதலமடைந்து காணப்படுவதாகவும், அதில் 20 மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கல்வி பயின்று வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க–வில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிதலமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டடத்தை கட்டிக்கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×