search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி அருகே அங்கன்வாடி கட்டிட மேற்கூரை இடிந்து விழந்தது
    X

    ஆலங்குடி அருகே அங்கன்வாடி கட்டிட மேற்கூரை இடிந்து விழந்தது

    • விஜயரெகுநாதபட்டி அங்கன்வாடி மையம் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது
    • தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரெகுநாதபட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பினர். தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

    சிதலமடைந்த அந்த கட்டிடத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும் சிதலமடைந்து காணப்படுவதாகவும், அதில் 20 மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கல்வி பயின்று வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க–வில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிதலமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டடத்தை கட்டிக்கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×