search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers dies"

    திருப்பூரில் இன்று காலை மின்சாரம் தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருப்பூர்:

    கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராஜாமணி என்பவருடன் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் வேலை செய்தனர். தகரத்தால் ஆன டேப் கொண்டு கட்டிட துளைக்குள் அளவீடு செய்தனர். ஒரு துளைக்குள் தகர டேப்பை நுழைத்து அளவீடு செய்தபோது கட்டிடத்திற்குள் இருந்த மின்வயரில் கசிந்த மின்சாரம் அவர்களை தாக்கியது.

    இதில் கிருஷ்ணமூர்த்தியும், ராஜாமணியும் தூக்கி வீசப்பட்டனர். அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். #Tamilnews
    ×