search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Jewel Robbery In Madurai"

    மதுரை வெவ்வேறு சம்பவங்களில் பெண்களிடம் 39 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    சென்னை மேற்கு மாம்பழம் லேக்வியூ சாலையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது50). சம்பவத்தன்று மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த இவர் பெத்தானியாபுரம் ஆரோக்கியமாதா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென்று சரஸ்வதி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    மதுரை கண்ணனேந்தல் சென்ட்ரல் காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி வள்ளி (65). இவர் சம்பவத்தன்று அதே பகுதி யில் உள்ள முதியோர் இல்லம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை வழி மறித்த 2 டிப்-டாப் ஆசாமிகள் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டனர். இருவரும் வள்ளியிடம் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே நகை அணிந்து செல்ல வேண்டாம் என கூறினர்.

    பின்னர் அவர்கள் வள்ளி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை வாங்கி ஒரு பேப்பரில் மடித்து வைத்து கொடுப்பதுபோல் கொடுத்து நகையை அபேஸ் செய்தனர். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அதில் கற்கள், கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    வேலூரைச் சேர்ந்தவர் தெய்வானை (55). இவரது மகள் மதுரை காமராஜர்புரத்தில் உள்ள வைத்தியநாதர் அய்யர் தெருவில் வசித்து வருகிறார்.

    உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக தெய்வானை சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார். மகள் வீட்டில் தங்கி இருந்தபோது வீட்டுக்கு புகுந்த மர்ம நபர் தெய்வானையின் பேக்கில் இருந்த 18 பவுன் நகையை திருடிக்கொண்டு நைசாக தப்பினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் நர்சு உள்பட 2 பெண்களிடம் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எஸ்.எஸ்.காலனி, விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை நகரில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மாவிலிப்பட் டியைச் சேர்ந்தவர் வளவன்ரவி. இவரது மனைவி தனலட்சுமி. இவர் நகை வாங்குவதற்காக மதுரைக்கு காரில் வந்தார்.

    இங்குள்ள பிரபல கடையில் நகை வாங்கிய தனலட்சுமி பின்னர் ஊருக்கு புறப்பட்டார். காளவாசல் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றார்.

    அப்போது கார் டிரைவரை மர்ம நபர்கள் திசை திருப்பி காரின் உள்ளே இருந்த 17 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பினர்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை பீ.பி.குளம், நேதாஜி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவரது மனைவி பண்ணைக்கரசி (வயது 56).

    இவர் நேற்று மாலை காமராஜர் சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் இருந்து கீழமாரட் வீதிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பண்ணைக்கரசி அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை நைசாக பறித்துக் கொண்டு தப்பினார்.

    எல்லீஸ்நகர் கலைஞர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (42). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டின் அருகே மாலதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மாலதி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    மேற்கண்ட சம்பவங்கள் குறித்து எஸ்.எஸ்.காலனி, விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×