என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் நர்சு உள்பட 2 பெண்களிடம் 31 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்2 Aug 2018 7:32 AM GMT
மதுரையில் நர்சு உள்பட 2 பெண்களிடம் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எஸ்.எஸ்.காலனி, விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை நகரில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மாவிலிப்பட் டியைச் சேர்ந்தவர் வளவன்ரவி. இவரது மனைவி தனலட்சுமி. இவர் நகை வாங்குவதற்காக மதுரைக்கு காரில் வந்தார்.
இங்குள்ள பிரபல கடையில் நகை வாங்கிய தனலட்சுமி பின்னர் ஊருக்கு புறப்பட்டார். காளவாசல் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றார்.
அப்போது கார் டிரைவரை மர்ம நபர்கள் திசை திருப்பி காரின் உள்ளே இருந்த 17 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பினர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை பீ.பி.குளம், நேதாஜி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவரது மனைவி பண்ணைக்கரசி (வயது 56).
இவர் நேற்று மாலை காமராஜர் சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் இருந்து கீழமாரட் வீதிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பண்ணைக்கரசி அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை நைசாக பறித்துக் கொண்டு தப்பினார்.
எல்லீஸ்நகர் கலைஞர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (42). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டின் அருகே மாலதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மாலதி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து எஸ்.எஸ்.காலனி, விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நகரில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மாவிலிப்பட் டியைச் சேர்ந்தவர் வளவன்ரவி. இவரது மனைவி தனலட்சுமி. இவர் நகை வாங்குவதற்காக மதுரைக்கு காரில் வந்தார்.
இங்குள்ள பிரபல கடையில் நகை வாங்கிய தனலட்சுமி பின்னர் ஊருக்கு புறப்பட்டார். காளவாசல் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றார்.
அப்போது கார் டிரைவரை மர்ம நபர்கள் திசை திருப்பி காரின் உள்ளே இருந்த 17 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பினர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை பீ.பி.குளம், நேதாஜி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவரது மனைவி பண்ணைக்கரசி (வயது 56).
இவர் நேற்று மாலை காமராஜர் சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் இருந்து கீழமாரட் வீதிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பண்ணைக்கரசி அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை நைசாக பறித்துக் கொண்டு தப்பினார்.
எல்லீஸ்நகர் கலைஞர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (42). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டின் அருகே மாலதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மாலதி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து எஸ்.எஸ்.காலனி, விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X