search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman பெண்ணுக்கு செல்போனில் தொந்தரவு"

    தேனி அருகே பெண்ணுக்கு செல்போனில் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கருவேலநாயக்கன்பட்டி திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பிரதீப்குமார் மனைவி முத்துமீனா (வயது23). இவருக்கு ஜெகதீஸ் என்ற வாலிபர் செல்போனில் பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமீனா அவரது அழைப்புகளை எடுக்க வில்லை. ஜெகதீஸ் முத்துமீனா வீட்டுக்கு சென்று என்னுடன் ஏன்? பேசவில்லை என கேட்டு மிரட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட முத்துமீனாவின் உறவினர்களையும் மிரட்டி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.

    இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவியுடன் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை மலைச்சாமி தட்டிகேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டி மலைச்சாமியை தாக்கினார். தடுக்க வந்த மலைச்சாமியின் தாயாரையும் மிரட்டி உள்ளார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.

    ×