search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman employees injured"

    வத்தலக்குண்டு அருகே இன்று அதிகாலை அரசு பஸ் மோதியதில் 5 பெண்கள் நசுங்கினர்.

    திண்டுக்கல்:

    வத்தலக்குண்டு அருகே அய்யம்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர் செங்கட்டாம்பட்டிக்கு 100 நாள் வேலை பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கம்பம் நோக்கி வந்த அரசு பஸ் நடந்து சென்று தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கிருஷ்ணவேணி (வயது 45), லட்சுமி (45), திருத்தணி (42), பொன்னுத்தாய் (60), விஜயா (9) ஆகிய 5 பேர் உடல் நசுங்கினர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கிருஷ்ணவேணியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×