search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wall"

    வடகாடு மலைப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பில் 13 தடுப்புச்சுவர்கள், வி. வடிவ சிமெண்ட் தரை தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, பெத்தேல்புரம் வழியாக பாச்சலூர், கே.சி.பட்டி, வத்தலகுண்டு, பெரியகுளம், கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    கே.சி.பட்டி முதல் ஒட்டன்சத்திரம் வரை மாவட்ட இதர சாலைகள் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் 13 தடுப்புச்சுவர்களும், வி. வடிவ சிமெண்ட் தரைதளமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் மூலம் மலைப்பகுதிக்கு செல்லும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். மேலும் மழை காலங்களில் மலைப்பகுதியிலிருந்து வரும் தண்ணீர் தார்சாலையை பாதிக்காத வண்ணம் வி. வடிவ சிமெண்ட் தரைதளம் அமைக்கப்படுவதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
    குடிபோதையில் மதில் சுவரில் அமர்ந்திருந்த தொழிலாளி தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ராமநாதபுர காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). கூலித் தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள கிருஷ்ணமூர்த்தி சம்பவத்தன்று தொண்ட மாநத்தம் பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று அங்கு சாராயம் குடித்து விட்டு அருகில் உள்ள மதில் சுவரில் ஏறி அமர்ந்திருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணமூர்த்தி மதில்சுவரில் இருந்து தவறி விழுந்தார். இதில் முதுகு தண்டு வடம் உள்ளிட்ட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் கிளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×