search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetables Fruits"

    தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

    பழுத்த தக்காளி பழத்தில் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலிய நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு சாறாக்கி அருந்தினால் நோய் குணமாகும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும். உடல் பருமன் குறையும்!

    பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைப்பதுடன்100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும். கலோரி 20 என்பதால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.

    உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.

    தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

    தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது. இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

    காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன.

    பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.
    கிவி பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது.

    ‘கிவி’ என்பது நாம் அதிகம் உட்கொள்ளாத கனி. இதன் விலையும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது, கிவி.

    உதாரணமாக, இப்பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், அது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

    மாரடைப்புக்கு முன் பலவகையான நோயியல் நிகழ்வுகள் இதயத் தமனிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, கட்டியான அடைப்பாக மாறி, இதயத் தமனிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.

    இவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது. இது வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும். இப்பழத்தில் ‘போலேட்’ என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட மிக அதிக அளவில் உள்ளன.

    இந்தச் சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளவை ஆகும். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

    கிவி பழத்தில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், இப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

    இப்பழத்தில் உள்ள வைட்டமின் இ, பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கத் துணைபுரிவதுடன், பெண்கள் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகிறது.
    ×