என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vannarpettai"
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). தச்சு தொழிலாளி இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு கணேஷ், ரமேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா இறந்து போனார். இதையடுத்து ராஜேந்திரன் தனது இளைய மகன் ரமேசுடன் வசித்து வந்தார்.
மனைவி இறந்த வேதனையில் ராஜேந்திரன் குடிபழக்கத்துக்கு ஆளானார். இறந்து போன மனைவியை மறக்க முடியாமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.
சம்பவத்தன்று ரமேஷ் சுற்றுலா சென்றிருந்த நிலையில் ராஜேந்திரன் அளவுக்கு அதிகமாகமது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறிய போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ராஜேந்திரனை பக்கத்து வீட்டுக்காரர் பரசுராமன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்