search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandavasi home robbery"

    வந்தவாசி அருகே 2 வியாபாரி வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50). மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி கனகபுஷ்பா (45).

    நேற்று மதியம் அடைக்கலத்திற்கு உணவு கொடுப்பதற்காக கனகபுஷ்பா வீட்டை பூட்டிச் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14 ஆயிரத்தை திருடி தப்பிச் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வநத கனகபுஷ்பா வீட்டின் கதவு திறக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை, 6 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×