search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthukottai robbery"

    ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா.

    நேற்று காலை சிவகுமார் மளிகை பொருட்கள் வாங்க ஊத்துக்கோட்டைக்கு சென்றார். புஷ்பலதா அதே கிராமத்தில் நடக்கும் தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு வீட்டின் கதவை பூட்டாமல் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சிவக்குமாரின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம், வெள்ளி, தங்க நகையை கொள்ளயடித்து தப்பி சென்று விட்டனர்.

    சிவகுமார் வீட்டிற்கு திரும்பி வந்த போது நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×