search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uraiyur Kamalavalli Nachiyar Temple"

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை பட்டர்கள் கோவிலில் இருந்து வெள்ளி குடங்களுடன் காவிரி கரைக்கு புறப்பட்டனர். காவிரி நீர் அடங்கிய குடங்களை யானைமீது வைத்து அமர்ந்த படி கோவிலுக்கு வந்தனர்.

    மேளதாளங்கள் முழங்க திருமஞ்சன குடங்கள் கோவிலை அடைந்ததும் காலை 10.30 மணி அளவில் அங்கில் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடந்து. மாலை 3 மணி அளவில் அங்கில் சுத்தம் செய்து ஒப்படைக்கப்பட்டது.

    இதனையொட்டி நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு மேல் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) திருப்பாவாடை உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் பொதுஜன சேவைக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு காவிரியில் இருந்து பட்டர்கள் புனித நீர் எடுத்து வந்து காலை 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் இறக்கி வைக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தலும், மாலை 3 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.

    மறு நாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை திருநாளையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெறும். காலை 11 மணி முதல் 12 மணிவரை பொதுஜன சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும், 21-ந்தேதி காலை 11 மணி வரையிலும் பொது ஜனசேவை கிடையாது.

    இதேபோல லால்குடி தாலுகா அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு கோவிலில் இருந்து குடம் எடுத்தலும், 9 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடம் புறப்படுதலும், 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் சேருதலும், 10 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளலும், பகல் 1.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மற்றொரு உபகோவிலான திருவெள்ளறை புண்டரீ காட்ச பெருமாள் கோவிலில் வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து தங்க குடம் எடுத்து செல்கிறார்கள். 9.30 மணிக்கு தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு திருமஞ்சன குடங்கள் வீதி வலம் வந்து சன்னதி சேருகிறது. காலை 11 மணிக்கு பெருமாள், தாயார் அங்கில்கள் ஒப்புவித்தலும், இரவு 7 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். மறு நாள் (25-ந்தேதி) காலை 7 மணிக்கு தளிகை எடுத்தலும், 10 மணிக்கு திருப்பாவாடை அமுது செய்து மங்கள ஆரத்தி கண்டருளலும், 10.15 மணிக்கு தீர்த்த கோஷ்டி மரியாதையும், 10.15 மணி முதல் 12 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதியும் அளிக்கப்படும்.

    இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார். 
    ×