என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்19 July 2018 4:28 AM GMT (Updated: 19 July 2018 4:28 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு காவிரியில் இருந்து பட்டர்கள் புனித நீர் எடுத்து வந்து காலை 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் இறக்கி வைக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தலும், மாலை 3 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.
மறு நாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை திருநாளையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெறும். காலை 11 மணி முதல் 12 மணிவரை பொதுஜன சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும், 21-ந்தேதி காலை 11 மணி வரையிலும் பொது ஜனசேவை கிடையாது.
இதேபோல லால்குடி தாலுகா அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு கோவிலில் இருந்து குடம் எடுத்தலும், 9 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடம் புறப்படுதலும், 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் சேருதலும், 10 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளலும், பகல் 1.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெறும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மற்றொரு உபகோவிலான திருவெள்ளறை புண்டரீ காட்ச பெருமாள் கோவிலில் வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து தங்க குடம் எடுத்து செல்கிறார்கள். 9.30 மணிக்கு தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு திருமஞ்சன குடங்கள் வீதி வலம் வந்து சன்னதி சேருகிறது. காலை 11 மணிக்கு பெருமாள், தாயார் அங்கில்கள் ஒப்புவித்தலும், இரவு 7 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். மறு நாள் (25-ந்தேதி) காலை 7 மணிக்கு தளிகை எடுத்தலும், 10 மணிக்கு திருப்பாவாடை அமுது செய்து மங்கள ஆரத்தி கண்டருளலும், 10.15 மணிக்கு தீர்த்த கோஷ்டி மரியாதையும், 10.15 மணி முதல் 12 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதியும் அளிக்கப்படும்.
இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.
இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு காவிரியில் இருந்து பட்டர்கள் புனித நீர் எடுத்து வந்து காலை 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் இறக்கி வைக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தலும், மாலை 3 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.
மறு நாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை திருநாளையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெறும். காலை 11 மணி முதல் 12 மணிவரை பொதுஜன சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும், 21-ந்தேதி காலை 11 மணி வரையிலும் பொது ஜனசேவை கிடையாது.
இதேபோல லால்குடி தாலுகா அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு கோவிலில் இருந்து குடம் எடுத்தலும், 9 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடம் புறப்படுதலும், 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் சேருதலும், 10 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளலும், பகல் 1.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெறும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மற்றொரு உபகோவிலான திருவெள்ளறை புண்டரீ காட்ச பெருமாள் கோவிலில் வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து தங்க குடம் எடுத்து செல்கிறார்கள். 9.30 மணிக்கு தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு திருமஞ்சன குடங்கள் வீதி வலம் வந்து சன்னதி சேருகிறது. காலை 11 மணிக்கு பெருமாள், தாயார் அங்கில்கள் ஒப்புவித்தலும், இரவு 7 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். மறு நாள் (25-ந்தேதி) காலை 7 மணிக்கு தளிகை எடுத்தலும், 10 மணிக்கு திருப்பாவாடை அமுது செய்து மங்கள ஆரத்தி கண்டருளலும், 10.15 மணிக்கு தீர்த்த கோஷ்டி மரியாதையும், 10.15 மணி முதல் 12 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதியும் அளிக்கப்படும்.
இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X