search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jyeshta abhishekam"

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு காவிரியில் இருந்து பட்டர்கள் புனித நீர் எடுத்து வந்து காலை 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் இறக்கி வைக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தலும், மாலை 3 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும்.

    மறு நாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை திருநாளையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெறும். காலை 11 மணி முதல் 12 மணிவரை பொதுஜன சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும், 21-ந்தேதி காலை 11 மணி வரையிலும் பொது ஜனசேவை கிடையாது.

    இதேபோல லால்குடி தாலுகா அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு கோவிலில் இருந்து குடம் எடுத்தலும், 9 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடம் புறப்படுதலும், 9.30 மணிக்கு கோவிலில் திருமஞ்சன குடம் சேருதலும், 10 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளலும், பகல் 1.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மற்றொரு உபகோவிலான திருவெள்ளறை புண்டரீ காட்ச பெருமாள் கோவிலில் வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து தங்க குடம் எடுத்து செல்கிறார்கள். 9.30 மணிக்கு தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு திருமஞ்சன குடங்கள் வீதி வலம் வந்து சன்னதி சேருகிறது. காலை 11 மணிக்கு பெருமாள், தாயார் அங்கில்கள் ஒப்புவித்தலும், இரவு 7 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். மறு நாள் (25-ந்தேதி) காலை 7 மணிக்கு தளிகை எடுத்தலும், 10 மணிக்கு திருப்பாவாடை அமுது செய்து மங்கள ஆரத்தி கண்டருளலும், 10.15 மணிக்கு தீர்த்த கோஷ்டி மரியாதையும், 10.15 மணி முதல் 12 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதியும் அளிக்கப்படும்.

    இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இக்கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதியும், ஸ்ரீரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 6-ந் தேதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் அடங்கிய வெள்ளி குடத்தை யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகளை செப்பனிட்டு, தூய்மை செய்து திருவாபரணங்கள் மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. மாலையில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.

    இதேபோல் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மர், மகாலட்சுமி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவற்றில் சிறு பழுதுகளை செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் மூலவர்கள் லட்சுமிநரசிம்மர், மகாலட்சுமி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது. 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. காவிரியில் புனித நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நேற்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.30 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக தாயார் சன்னதிக்கு காலை 9.30 மணிக்கு எடுத்துவரப்பட்டது.

    பின்னர் தாயார் சன்னதியில் மூலவர்்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் மூலவர்்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது. இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் நேற்று முழுவதும் மூலவர் சேவை இல்லை.

    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும்.

    மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்களஆரத்தி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.
    ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு செல்வர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்படும்.

    பின்னர் காவிரி ஆற்றில் தங்கக்குடம் மற்றும் வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்படும். அங்கிருந்து 7.30 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும். பின்னர் தாயார் சன்னதியில் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து தாயார் சன்னதியில் ஸ்ரீதேவிக்கும், பூதேவிக்கும் அரிய வகை மூலிகைகளால் தைலகாப்பு பூசப்படும். அதன் பின் தாயார் சன்னதியில் நகைகள் பழுது பார்க்கும் பணியும், எடை சரிபார்க்கப்படும் பணியும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்களஆரத்தி நடைபெறும்.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் இன்று முழுவதும் மூலவர் சேவை கிடையாது. நாளை (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 7 மணிக்கு தாயார் சன்னதியில் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் அதிக அளவில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெறும். மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க கவசம் 19-ந்தேதி அகற்றப்பட உள்ளது.

    அதைத்தொடர்ந்து 24-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும், வஜ்ஜிர கவசம் அணிவிக்கப்படுகிறது. வஜ்ஜிர கவசத்துடன் உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 2-வது நாளான 25-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    3-வது நாளான 26-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்படும் தங்கக் கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே அகற்றப்படாமல் இருக்கும்.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 24-ந்தேதி வசந்த உற்சவம், 25-ந்தேதி விசே‌ஷ பூஜை, வசந்த உற்சவம், 26-ந்தேதி அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்ட 3 நாட்கள் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமால சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களுக்கு தரிசன அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
    ×