search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trauma"

    • தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
    • திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகலாவுதீன் (வயது 24) கணேஷ் (23). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருநாகேஸ்வரம் மேலமடவளாகம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் ஏ.சி. எந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் படுகாயமடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாய தொழிலாளி.

    இவருடைய மகன் மாதேஷ் (வயது3).

    இவர்கள் கடந்த 21-ந் தேதி திருப்பனந்தாளில் இருந்து மானம்பாடி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.திருவாய்ப்பா டியில்சென்றபோது அங்கு வந்த மாடு இருவரையும் முட்டியது.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மாதேஷ் மேல் சிகிச் சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை மாதேஷ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×