search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai govt hospital"

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் 2 நாட்களாக தனியறையில் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி (60) இவருக்கு சொந்தம் என்று சொல்லிகொள்ள யாரும் இல்லை.

    இவருக்கு ஒரு கை, ஒரு கால் செயல் இழந்த நிலையில் கேட்பாரற்று சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் திருவண்ணாமலை சாலை ஓரத்தில் மயங்கி கிடந்தார்.

    இவரை சமூக சேவகர் மணிமாறன் என்பவர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி செய்து விட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்டு வந்து விட்டார்.

    மருத்துவமணை ஊழியர்கள் கேட்பாரற்று கிடக்கும் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் உள்ள ஒரு கட்டிலில் இந்த முதியவரை போட்டுவிட்டு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக அவரது கையில் ஊசிகளை போட்டு சென்று விட்டனர்.

    ஊசி போட்ட இடத்தின் வழியாக நிறைய ரத்தம் அவரது உடம்பில் இருந்து வெளியேறி உள்ளது. முதியவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரால் பேசக்கூட முடியவில்லை. கூப்பிட்டால் கூட யாருக்கும் கேட்காத நிலையில் கிடந்துள்ளார், அந்த அறையில் இவரை தவிர வேறு ஒருத்தரும் கிடையாது.

    இரண்டு நாட்களாக ஒரு வேளை கூட தண்ணீர் சாப்பாடு அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை என கூறப்படுகிறது. ரத்தம் வெளியேறிய நிலையில் சோறு தண்ணீர் இல்லாததால் முதியவர் மயக்க நிலையிலேயே கிடந்துள்ளார்.

    இரண்டு நாள் கழித்து மணிமாறன் சென்று பார்த்த போதுதான் முதியவரின் பரிதாப நிலையை கண்டார். இது பற்றி புகார் கூறிய பின்னரும் அந்த முதியவருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவே இல்லை.

    சமூக சேவகர் வாங்கி வந்த உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட ரஷிய இளம்பெண் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்த ரஷிய இளம்பெண் அலினா (வயது 22). கடந்த 16-ந் தேதி காலை அலங்கோலமான நிலையில் கிடந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடந்த சம்பவம் குறித்து ரஷிய பெண் திருவண்ணாமலை மருத்துவமனையில் ஆரணி மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமியிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை அபார்ட்மெண்ட் உரிமையாளர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் 2 முறை பலாத்காரம் செய்ததாகவும், பாரதியின் அண்ணன் நீலகண்டன் (வயது 35), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகிய 3 பேர் மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷிய இளம்பெண் பூரண குணமடைந்தார். இதையடுத்து அவரை நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் ரஷிய டாக்டர் முன்னிலையில் டாக்டர்கள் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்தனர். தொடர்ந்து சட்டரீதியான விசாரணை உள்ளதால், அவர் சில நாட்கள் இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் ரமணாஸ்ரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ரஷிய இளம்பெண்ணை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆரணி கோர்ட்டிற்கு விசாரணைக்கு ரஷிய இளம் பெண்ணை போலீசார் அழைத்து சென்றனர்.

    ஆரணி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி முன்னிலையில் ரஷிய இளம்பெண் இரவு சுமார் 7.30 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். இதையடுத்து மீண்டும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
    ×