என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்
Byமாலை மலர்12 Sep 2018 11:10 AM GMT (Updated: 12 Sep 2018 11:10 AM GMT)
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் 2 நாட்களாக தனியறையில் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி (60) இவருக்கு சொந்தம் என்று சொல்லிகொள்ள யாரும் இல்லை.
இவருக்கு ஒரு கை, ஒரு கால் செயல் இழந்த நிலையில் கேட்பாரற்று சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் திருவண்ணாமலை சாலை ஓரத்தில் மயங்கி கிடந்தார்.
இவரை சமூக சேவகர் மணிமாறன் என்பவர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி செய்து விட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்டு வந்து விட்டார்.
மருத்துவமணை ஊழியர்கள் கேட்பாரற்று கிடக்கும் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் உள்ள ஒரு கட்டிலில் இந்த முதியவரை போட்டுவிட்டு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக அவரது கையில் ஊசிகளை போட்டு சென்று விட்டனர்.
ஊசி போட்ட இடத்தின் வழியாக நிறைய ரத்தம் அவரது உடம்பில் இருந்து வெளியேறி உள்ளது. முதியவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரால் பேசக்கூட முடியவில்லை. கூப்பிட்டால் கூட யாருக்கும் கேட்காத நிலையில் கிடந்துள்ளார், அந்த அறையில் இவரை தவிர வேறு ஒருத்தரும் கிடையாது.
இரண்டு நாட்களாக ஒரு வேளை கூட தண்ணீர் சாப்பாடு அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை என கூறப்படுகிறது. ரத்தம் வெளியேறிய நிலையில் சோறு தண்ணீர் இல்லாததால் முதியவர் மயக்க நிலையிலேயே கிடந்துள்ளார்.
இரண்டு நாள் கழித்து மணிமாறன் சென்று பார்த்த போதுதான் முதியவரின் பரிதாப நிலையை கண்டார். இது பற்றி புகார் கூறிய பின்னரும் அந்த முதியவருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவே இல்லை.
சமூக சேவகர் வாங்கி வந்த உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி (60) இவருக்கு சொந்தம் என்று சொல்லிகொள்ள யாரும் இல்லை.
இவருக்கு ஒரு கை, ஒரு கால் செயல் இழந்த நிலையில் கேட்பாரற்று சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் திருவண்ணாமலை சாலை ஓரத்தில் மயங்கி கிடந்தார்.
இவரை சமூக சேவகர் மணிமாறன் என்பவர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி செய்து விட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்டு வந்து விட்டார்.
மருத்துவமணை ஊழியர்கள் கேட்பாரற்று கிடக்கும் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் உள்ள ஒரு கட்டிலில் இந்த முதியவரை போட்டுவிட்டு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக அவரது கையில் ஊசிகளை போட்டு சென்று விட்டனர்.
ஊசி போட்ட இடத்தின் வழியாக நிறைய ரத்தம் அவரது உடம்பில் இருந்து வெளியேறி உள்ளது. முதியவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரால் பேசக்கூட முடியவில்லை. கூப்பிட்டால் கூட யாருக்கும் கேட்காத நிலையில் கிடந்துள்ளார், அந்த அறையில் இவரை தவிர வேறு ஒருத்தரும் கிடையாது.
இரண்டு நாட்களாக ஒரு வேளை கூட தண்ணீர் சாப்பாடு அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை என கூறப்படுகிறது. ரத்தம் வெளியேறிய நிலையில் சோறு தண்ணீர் இல்லாததால் முதியவர் மயக்க நிலையிலேயே கிடந்துள்ளார்.
இரண்டு நாள் கழித்து மணிமாறன் சென்று பார்த்த போதுதான் முதியவரின் பரிதாப நிலையை கண்டார். இது பற்றி புகார் கூறிய பின்னரும் அந்த முதியவருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவே இல்லை.
சமூக சேவகர் வாங்கி வந்த உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X