என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thiruvarur worker death"
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் காவல் சரகத்திற்கு உள்பட்ட சோழாச்சியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 55). கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று கல்யாண சுந்தரம் தனது தங்கை ரேனுகா வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் கல்யாண சுந்தரத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து வடபாதி மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் விஜயபுரம் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). குடிப்பழக்கம் உடையவர். சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி.
இந்நிலையில் நேற்று கோவிந்தசாமி அதிகமாக மது குடித்து விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் இறந்து கிடந்தார். இதைபார்த்த அவரது உறவினர்கள் திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கோவிந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி அஞ்சமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்