search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் அதிக மது குடித்த தொழிலாளி பலி
    X

    திருவாரூரில் அதிக மது குடித்த தொழிலாளி பலி

    திருவாரூரில் அதிக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). குடிப்பழக்கம் உடையவர். சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி.

    இந்நிலையில் நேற்று கோவிந்தசாமி அதிகமாக மது குடித்து விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் இறந்து கிடந்தார். இதைபார்த்த அவரது உறவினர்கள் திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கோவிந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி அஞ்சமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×